மேடையிலேயே மோடியை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி.!
kanimozhi speech about modi
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து இரு விஷயங்கள் குறித்து மட்டுமே பேசி வருகின்றார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார்.
சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் துவங்கியுள்ள கையெழுத்து இயகத்தின் கூட்டமானது நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, "வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை ஆகியவை அதிகரித்து இருக்கின்றது. இந்த நிலையில், இதனை திசை திருப்பும் விதமாக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்க தக்க விஷயமாகும். மோடி பாகிஸ்தான், நேரு ஆகிய இந்த இரு விஷயங்களை தவிர வேறு எதைப் பற்றியும் பேசுவதே இல்லை." என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
English Summary
kanimozhi speech about modi