#சற்றுமுன் | கனல் கண்ணன் ஜாமீன் வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 1ஆம் தேதி இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று பேசி இருந்தார்.

இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பவே, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இதுகுறித்து புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யவே, கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது.

இதனையடுத்து கனல் கண்ணன் கனல் கண்ணனை போலீசார் கைது செய்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அபோது நீதிபதி வருகின்ற 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலின் கீழ் கனல் கண்ணனை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்க்கு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanal kannan bail case aug


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->