கனல்கண்ணனின் ஜாமீன் நிபந்தனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! வெளியான காரணம்! - Seithipunal
Seithipunal


மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று, பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளருமான கனல் கண்ணன் பேசி இருந்தார்.

இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கனல் கண்ணனை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்தார். 

இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "ஒரு அமைப்பில் இருக்கும்போது, மாற்றுக் கருத்து கொண்டவர்களை குறித்து ஏன் பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நாளை முதல் செப்.17 வரை நிறுத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக கேரளம் செல்வதால், தனக்கு ஜாமீன் நிபந்தனையை நிறுத்திவைக்கக்கோரி கனல்கண்ணனின் மனுவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanal kannan bai case sep


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->