மணிகண்டன் மர்ம மரணம்: இங்கிட்டும் இல்லாம., அங்கிட்டும் இல்லாம., நடுவுல நின்னு ஏதோ சொல்ல வரும் கமல்.!  - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என்று மணிகண்டனின் பெற்றோரும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மணிகண்டனின் மரணம் குறித்து உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. மேலும் உடற்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. 

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் பதிவு கொழுப்பும் படியாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதுக்கு வம்பு என்று கமல் நடுநிலையோடு பதிவிட்டுள்ளதாகவும் பலரும் பின்னூட்டம் இடுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KAMAL SAY ABOUT MANIKANDAN DEAD ISSUE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->