யாருடன் கூட்டணி.? கமல்ஹாசன் சொன்ன அந்த பதில்.. உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற  புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த போது அயோத்தி ராமர் கோயில் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "நான் அதைப்பற்றி 30 வருடங்களுக்கு முன்பே பேசியுள்ளேன். அதே கருத்து தான் இப்போதும், புதிதாக எந்த கருத்தும் இல்லை" தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய மற்றோரு கேள்விக்கு பதிலளித்த அவர் "நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்தோ, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்றோ எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் நாளை காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகிகளும் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இந்த பதிலால் அரசியல் கட்சிகளின் பார்வை மக்கள் நீதி மய்யம் பக்கம் திரும்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal haasan said undecided in election alliance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->