#BigBreaking || உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.!
indian student dead in ukraine
உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை சற்று முன்பு தொடங்கியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் சற்றுமுன்பு வான்வெளி தாக்குதலை ரஷ்யா தொடங்கி உள்ளது.
மேலும் பீரங்கிகள் மூலமாகவும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வான்வழித் தாக்குதலை ரஷ்யா தற்போது தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட இந்தப் போரில் தனது உச்சகட்ட தாக்குதலை ரஷ்யா தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயிலில் செல்லும்போது, ரஷ்ய நடத்திய தாக்குதலில் கர்நாடக மாணவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
குண்டு வீச்சு சம்பவத்தில் கார்கிவ் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.
English Summary
indian student dead in ukraine