ஜெயலலிதாவைப் போல ஆட்சி செய்ய விரும்புகிறேன் சசிகலா.. விரைவில் அரசியல் பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சசிகலா கடந்த சில நாட்களாக ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு வந்தார். அதன் பின்னர் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தீபாராதனை தரிசனம் செய்ய வந்த அவர் கையில் 5 அடி உயர வெண்கல வேலுடன் வள்ளி குகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வெண்கல வேலினை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இவர், 

ஒரு வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தினேன். விரைவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்திப்பேன் என்றார். தொடர்ந்து அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுகவில் தான் இருப்பதாகவும், எங்கள் கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைவர்கள் தன்னை விமர்சிப்பதற்கு பதிலளித்த அவர், தொண்டர்கள்தான் தலைவர் ஆகின்றார்கள் என பதிலளித்தார். தொடர்ந்து திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்து பேசிய சசிகலா, இந்த ஓராண்டு கால ஆட்சியில் திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் பெண்கள் வெளியே தனியாக செல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல் நிலையங்களில் திமுகவி-னரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் எந்த குறையும் இருந்தது கிடையாது. அதேபோன்று ஆட்சியைக் கொடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I want to rule like Jayalalithaa Sasikala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->