நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரே வார்டில் எதிரெதிரே போட்டியிடும் கணவன்-மனைவி.!
Husband and wife candidate in same ward
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் கணவன், மனைவியுமான சுரேஷ், இளமதி ஒரே வார்டில் போட்டியிடுகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரே வார்டில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Husband and wife candidate in same ward