சாதிக்கயிருக்கு எதிர்ப்பா.? கொதித்தெழுந்த முக்கிய அரசியல் புள்ளி.!
H.RAJA TWEET ABOUT CASTE ICON
பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதன் படி, "தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர்.
குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது" என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி, "தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், "இது இந்து விரோத செயல்." இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் செய்தி:
English Summary
H.RAJA TWEET ABOUT CASTE ICON