முதல்வர் எடுத்த அதிரடி முடிவு - ஆளுநர் போட்ட அவசர தடை : இன்னும் 90 நாட்களில் தெரியப்போகும் சங்கதி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் 134 ஆம் ஆண்டு ஸ்தாபன விழா புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பிரதேச காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் நாராயணசாமி,

“தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவதுபோல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்று துறையின் அமைச்சர் அதற்கான கோப்பை எனக்கு அனுப்பினார்.

 

https://img.seithipunal.com/large/large_kiran-pedi-narayanasamy-4989.jpeg

நானும் அதை துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தேன். ஆனால், வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தரும்படி கோப்பை திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர் கிரண்பேடி.

நிதியிருந்தும் திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தி கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்க ஆளுநரும் பிரதமர் மோடியும் கூட்டாக செயல்பட்டு வருகிறார்.

இன்னும் 90 நாட்களுக்குத்தான் அவரை சமாளிக்க வேண்டும். அதன்பிறகு நாட்டிற்கு விடிவு காலம் கிடைக்கும்”என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor immediate order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->