தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு என்ன சிரமம்? - சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குப்புடி.! - Seithipunal
Seithipunal


கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்ற புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருப்பூர் தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வரவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அப்போது, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு என்ன சிரமம் ஏற்பட்டு இருக்கிறது? என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், 'தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அது தவிர திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மதமாற்றத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதற்கான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் முன் தமிழக அரசு தரப்பில், 'மதமாற்றத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக கன்னியாகுமரி மற்றும் திருப்பூரை தவிர வேறு எந்த பகுதியில் இருந்தும் புகார்கள் வரவில்லை.

ஒருவேளை புகார்கள் வந்தால் அந்த புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'நடவடிக்கை எடுப்பது சரிதான். இதற்கான விதிமுறைகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம்?' என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், 'இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற புகார்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த கோரிக்கையை வைக்க முடியாது. அது தொடர்பான வாதங்களை முன் வைப்பதற்கு கால அவகாசம் வேண்டும்' என்று கோரப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ''இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். நாளை முழுமையாக விசாரித்து உத்தரவிட முயற்சிக்கிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை நாளை தள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government of Tamil Nadu formulating rules to prevent forced conversion Chennai High Court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->