அக்னிசட்டி ஏந்திய கஞ்சா கருப்பு குடும்பம்.." இபிஎஸ்" தான் ஜெயிப்பாரு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல்  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் குடும்பத்துடன் இணைந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் மக்களைவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி அமோக வெற்றி பெற வேண்டும் என்று அக்னிசட்டி எடுத்து சாமியை வழிபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கஞ்சா கருப்பு பேசுகையில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது பெரிய விஷயம். மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கான அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ததாக குறிப்பிட்டார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறேன் என்றார்.

சமூக வலைதளங்களில் இது குறித்த காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கஞ்சா கருப்புவை விமர்சித்து  வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganja karuppu agni chatti for eps win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->