ஈரோடு இடைத்தேர்தல் | அதிமுக - பாஜக இடையே பேச்சு வார்த்தை!
Erode East By Election ADMK BJP Meet
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள நிலையில்இது தொடர்பாக நாளை அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) மறைந்தார்.
இதனையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதியும், மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டபடி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Erode East By Election ADMK BJP Meet