அதிரடியாக நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி இ.பி.ஸ், ஓ.பி.ஸ் கூட்டாக அறிவிப்பு!
eps and ops today action in admk
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (40 வயது), திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து மகள், மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், மலைக்கோட்ைட பகுதி அதிமுக பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.
மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், திருச்சியில் மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வந்தார் திருமணம் ஆகாதவர் என்பதால், சோமு அடிக்கடி அவரை பார்த்துள்ளார். பின் பேராசிரியையை திருமணம் செய்துகொள்ள நினைத்த சோமு பேராசிரியையை வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், உறவினர்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதனால் சோமு அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். இதையடுத்து நேற்று காலை 8 மணி அளவில் பேராசிரியை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நான்கு மர்ம நபர்கள் பேராசிரியையின் வாயை பொத்தி ஆம்புலன்சுக்குள் இழுத்து போட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிலர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு. ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி செல்வதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆம்புலன்சை விரட்டி சென்றனர். போலீசார் வருவதை கண்ட அந்த மர்ம கும்பல், திருச்சி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சியில் என்ற ஊரில் பேராசிரியையை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்தநிலையில், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மலைக்கோட்ைட பகுதி அதிமுக பொருளாளர் சோமுவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்குவதாக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
eps and ops today action in admk