ஓபிஎஸ்-இபிஎஸ் ராஜினாமா செய்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்-அதிமுக முன்னாள் நிர்வாகி.!
EPS and OPS shuld resign in ADMK
நேற்று மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதா சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர்கள் வரவில்லை என்றாலும் தமிழக அரசு சார்பில் விழா எடுத்ததற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக இயக்கம் அழிவு பாதையில் போய்க் கொண்டிருப்பதாகவும், சசிகலாவிடம் பிச்சை எடுத்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார்.
மேலும், அதிமுகவிலிருந்து ஓ ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ராஜினாமா செய்தால் மட்டுமே ஐசியூவில் இருக்கும் அதிமுக வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EPS and OPS shuld resign in ADMK