திமுகவுக்கு பழிவாங்கும் எண்ணம்.!! கொந்தளிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய கணவர் பன்னீர்செல்வம் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தோடு திமுக அரசியல் விமர்சனம் செய்துள்ளார். 

அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS alleged in DMK govt on DVAC raid


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->