இ.பி.எஸ் மீது அவமதிப்பு வழக்கு..தயாநிதி மாறன் அதிரடி.!!
Edappally pazhaniswami Contempt case
தமிழகத்தின் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து புரசவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த தொகுதியின் எம்.பி தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75% நிதியை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதனை அடுத்து தயாநிதி மாறன், என் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான தகவலை கூறியுள்ளார். 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்த நிலையில், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் தயாநிதி மாறன்.
English Summary
Edappally pazhaniswami Contempt case