அனல் பறக்கும் அரசியல் களம்... ஆரணி - திருவண்ணாமலையில் இபிஎஸ் பிரசாரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதான கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 

ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரனை ஆதரித்து இன்று மாலை 4 மணி அளவில் ஆரணி-சேயூர் சாலை சந்திப்பு அருகே பிரசாரக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளார். இதனை அடுத்து மாலை 6.30 மணி அளவில் திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்கிறார். 

இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி ஆரணி, திருவண்ணாமலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami election campaign


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->