எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி! பொதுச்செயலாளர் பதவி தப்புமா?!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 6 வாரத்தில் பதில் அளிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேர்தல் ஆணையதிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களில் தேர்தல் ஆணையம், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவின் சட்ட விதி திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே சி பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது குறித்து இன்னும் ஆறு வாரங்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் மனுதாரரின் மனுவிடற்கு பதிலளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy AIADMK case Delhi HC Notice issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->