அதிமுகவின் இரு எம்.எல்.ஏ.,க்கள் கைது... கொந்தளிப்பில் எடப்பாடி கே பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


மதுரை, திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டம் செய்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட கோரி போலீசார் அறிவுறித்தியபோதும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், போலீசார் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்ச்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சற்றுமுன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

"கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவரும் நிலையில் அதனை அகற்ற கோரி, அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், 

திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு‌. ஆர் பி உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன். 

திரு.உதயகுமார் அவர்களிடத்தில் திமுக அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து தொலைபேசியில் விசாரித்தேன்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi K Palaniswami condamn ADMK MLAs Arrest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->