#BigBreaking | எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி, வரும் 16ஆம் தேதி நடக்கும் செயல்முறை விளக்க கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த மாதம் தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

அந்த கடிதத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர்கள் என்று அதிமுகவில் யாரும் கிடையாது என்று, அந்த கடிதத்தை திருப்பி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு விவகாரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று மீண்டும் தபால் மூலம் தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மீண்டும் குறிப்பிட்டு தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EC tn letter to ADMK Office Again Orunkinaipalar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->