முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்த திமுக.. மகிழ்ச்சியில் ஓ.பி.எஸ்? - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியவை, திமுகவில் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். 

அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சர் ஆவதற்கு தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி மாற்றுமல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் எனக் கூறினார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுக்கொடுப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஓபிஎஸ் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

durai murugan says cm post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->