உருவானது புதிய கூட்டணி.? ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்!!
durai murugan meet opr
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் சலசலப்பு நிலையை வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான ரவீந்திரநாத் குமாரும், துரைமுருகனும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தேனியில் நடந்துள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில், குழுவின் தலைவர் துரைமுருகன், அதிமுக மக்களவை தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ரவீந்திரநாத் குமாரும், துரைமுருகன் நீண்ட நேரம் கலகலப்பாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தின் முடிவில் ரவீந்திரநாத் குமார் பச்சை கலர் சால்வையை துரைமுருகனுக்கு போர்த்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.