திமுக எம்.பி-யின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
dmk mp jagathratchagan asserts blocked
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்த வாங்கியது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும் படி ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும் படி தனக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை எதிர்த்து ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகள் வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
English Summary
dmk mp jagathratchagan asserts blocked