திமுக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்!! சோகத்தில் தொண்டர்கள்!!
dmk ex mla passed away
திமுக தலைமை நிலைய செயலாளராகவும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உசேன் இன்று காலை மரணமடைந்தார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வந்த அவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
முதன் முதலாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், பின் அடுத்த வந்த சட்டமன்ற தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியிலே போட்டியிட்டு வெற்றிபெற்றார். அன்றிலிருந்து ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயரால் திமுகவினரால் அழைக்கப்பட்டு வந்தார்.
சட்டமன்ற பதவி மட்டுமின்றி திமுக தொடர்பான பல்வேறு பணிகளிலும் ஈடுபடுத்தி கொண்ட அவர் என்பது திமுக தலைமை நிலைய செயலாளராகவும் ஆயிரம் விளக்கு உசேன் பணியாற்றினார். இன்று மாலை 4 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.