கங்கையும், பாஜகவும் ஒரே அழுக்கு தான்.. திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


கங்கையில் மூழ்கி இருந்தால் புனிதர்கள் ஆகிவிடுவது போல, பாஜகவின் சேர்ந்து விட்டால் அவர்கள் புனிதர்களாகி விடுகிறார்கள் என திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

செம்மண் குவாரி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜராகிய அமைச்சர் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் குற்றவாளி ஆகிவிட மாட்டார். விடிய விடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியை விசாரித்தது மனித உரிமை மீறல். பெங்களூரில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

பாஜகவும், கங்கையும் ஒன்றுதான். கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவது போல பாஜகவில் சேர்ந்து விட்டால் புனிதர்களாகி விடுகிறார்கள். கங்கையில் அழுக்கு உள்ளது போல பாஜகவிலும் அழுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK elangovan roasted BJP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->