கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைப்பு.. தேசியவாத காங்கிரஸ் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் சரத் பவர் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சரத் பவரின் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் உடன் கட்சியின் தேசிய செயலாளரான பிரபுல் பட்டேல்  எழுதிய கடிதத்தில் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா மற்றும் என் சி பி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்களும், சிவசேனாவில் ஏற்பட்ட பிளவும் தான்  இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dissolution of all divisions of the ncp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->