இதற்கு "முழு காரணம் எடப்பாடி தான்" - சி.வி சண்முகத்தின் பரபரப்பு பேச்சு.!!
CVShanmugam said eps is whole reason to save AIADMK
சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், நாடாளளுமன்ற உறுபினருமான சி.வி சண்முகம் "ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சி நீடிக்குமா என பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த இயக்கம் இத்தோடு முடிந்து விட்டது, இத்தோடு அதிமுகவின் சரித்திரம் முடிந்தது, என எதிரிகள் சந்தோஷமாக இருந்தார்கள். அனால் இதையெல்லாம் முறையடித்து எதிரிகளையும், கூட இருந்த துரோகிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது சாதாரண மக்களிலிருந்து மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் வரை, எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் ஆட்சி தொடருமா? நிர்வாகத்தை நடத்த முடியுமா? என கேள்விகளை முன் வைத்தார்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பினார்கள்.
ஆனால் அதற்கு எதுவும் பதில் சொல்லாமல், எதற்கும் செவி சாய்க்காமல், தன்னுடைய செயல்பாட்டால், தன்னுடைய திறமையால் என்னைப் போன்ற ஒரு முதலமைச்சர் வரமாட்டார் என நாட்டை ஆண்டு காட்டிய ஒரு முதலமைச்சர் தான் எடபடியார். இந்த நாட்டில் இவரை தவிர ஆள யாரும் இல்லை என நிரூபித்துக் காட்டியவர்கள் எடப்பாடியார். இன்று திமுகவில் உள்ள நிர்வாகிகளே உங்கள் முதல்வர் இருந்த காலத்தில் நடந்தது பணிகள் கூட இப்போதைய ஆட்சியில் நடைபெறவில்லை என திமுகவினரே ஆதங்கபடுகிற அளவுக்கு, நாம் பெருமைப்படுகிற அளவுக்கு ஆண்டு காட்டிய ஒரு முதலமைச்சர் நம் பொதுச்செயலாளர் எடப்பாடியார்.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய ஒரு சோதனை ஏற்பட்டது. சோதனை என்றால் எதிரிகளால் அல்ல. நம்முடைய இருந்து பதவி சுகமான அனுபவித்து, இந்த கட்சியில் யாராலும் கனவு காண முடியாத முதலமைச்சர் பொறுப்பு வரை அனுபவித்தவர்கள், எந்த இயக்கம் அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ அந்த இயக்கத்தின் அலுவலக கதவை எட்டி உதைத்தார்கள். அனால் பதட்டப்படாமல், எதற்கும் அஞ்சாமல், துணிவோடு நின்று இது வானகரத்தில் இன்று அமர்ந்திருக்கும் இதே செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தான் அன்றைக்கும் இருந்தோம். இன்றைக்கு இருக்கும் நிலைமை அன்றைக்கு நமக்கு இருந்திருந்ததா? என்பதை நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்., இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு நீதிமன்ற போராட்டத்தை, சட்ட போராட்டத்தை எதிர்கொண்டோம். எத்தனை வழக்குகள் எதிர்கொண்டம் என்பதை ஒரு கட்டத்தில் எண்ணிக்கொண்டிருந்தோம். அதன் பிறகு எண்ணுவதையே விட்டு விட்டோம். அத்தனை சட்ட போராட்டத்தையும் வெல்வதற்கு முழு காரணம் எடப்பாடியார் தான்" என பேசியுள்ளார்.
English Summary
CVShanmugam said eps is whole reason to save AIADMK