ஆர்.எஸ் பாரதிக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததோடு அதன் மீது பதில் அளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் 

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக நீதிமன்றத்திற்கு தாமாக முன்வந்து விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் பழி வாங்கும் நோக்கத்தோடு அது இருக்கக் கூடாது. நீதிபதியின் செயல் அவ்வாறு அமைந்துள்ளது என விமர்சனம் செய்திருந்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தையும் நீதிபதியும் அவமதித்துவிட்டதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார். அதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

நீதிபதியாக பதவி ஏற்றதற்கு சட்டப்படியான கடமையை நான் செய்தேன். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களால் நான் கவலைப்படவில்லை; கருத்திலும் கொள்ளவில்லை. நான் நிலை தவறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன்" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரை அவதூறாகப் பேசி, கேவலப்படுத்தி, அச்சுறுத்தி, நீதி நிர்வாகத்தில் தலையிட்டதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்துடன் வழக்கறிஞர்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Criminal defamation case to be filed against RSBharathi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->