மத்திய அரசுக்கு எதிராக தொடர் மறியல் போராட்டம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!
CPI announced that continue protest against BJP govt
மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருவதால் அதனை கண்டித்து நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வரும் 12, 13, 14 -ம் தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மையங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்பார்கள்.
தலைநகர் சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்க உள்ளதாகவும், இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகிளில் நடைபெறும் போராட்டத்தில் அந்த பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CPI announced that continue protest against BJP govt