இளையராஜா சாதி குறித்து பேசிய ஈவிகேஎஸ்  இளங்கோவன்..மீது காவல் நிலையத்தில் புகார்.! - Seithipunal
Seithipunal


இளையராஜாவின் சாதி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழா எடுத்தவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது என்றும் பணமும் புகழும் வந்துவிட்டால் உயர்ந்த சாதி ஆகிவிட முடியாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசியுள்ளதாகவும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தி கலவரம் தூண்டக்கூடிய வகையில் பேசியதாகவும், அவரை எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை சென்னை அடையார் சேர்ந்த மூர்த்தி என்பவர் அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress EVKS Elangovan on case filed elayaraja issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->