பூத் சிலிப் விநியோகம் எப்போது? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!
coming april 1st booth slip provide cheif election commissioner sathyapradha sahu info
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நிறைவடைந்தது. இறுதி பட்டியலும் இன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ "பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
coming april 1st booth slip provide cheif election commissioner sathyapradha sahu info