மத்திய அமைச்சருக்கு திடீரென கடிதம் எழுதிய முதல்வர் முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal



தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஒன்றிய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஜெய்சங்கர்‌ அவர்களுக்கு, இலங்கை சிறையில்‌ வாடும்‌ 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும்‌, 25 மீன்பிடிப்‌ படகுகளை மீட்க வலியுறுத்தியும்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எழுதியுள்ள கடிதத்தில்‌, இலங்கைச்‌ சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அரசுக்கு தனது நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதுடன்‌, கடந்த 2021 டிசம்பர்‌ 19 மற்றும்‌ 20 ஆம்‌ நாளிலிருந்து இலங்கை சிறைகளில்‌ வாடிக்‌ கொண்டிருக்கும்‌ 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

மேலும்‌, இலங்கை அரசின்‌ காவலில்‌ வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச்‌ சொந்தமான, அவர்களின்‌ வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப்‌ படகுகளையும்‌ மீட்டெடுக்கவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கோரியுள்ளார்‌. வரவிருக்கிற பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில்‌ வாடும்‌ 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள்‌ தங்கள்‌ குடும்பத்தினருடன்‌ மீண்டும்‌ இணைவதை உறுதி செய்திடத்‌ தேவையான அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ள வேண்டுமென்றும்‌, அதற்குரிய உயர்நிலைப்‌ பேச்சுவார்ததைகளை இலங்கை அரசாங்கத்துடன்‌ நடத்திடக்‌ கேட்டுக்கொள்வதாகவும்‌ தனது கடிதத்தில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ முக ஸ்டாலின் எழுதியுள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter to jaishankar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->