சிறுவர்கள் செய்த செயல்..பாமக ம.க ஸ்டாலின் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் வீடு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒரு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ம.க ஸ்டாலின். அந்த வகையில், பூதக்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களிடையே திட்டங்களை கூறிவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, நான்கு சிறுவர்கள் பேப்பரில் மாம்பழச் சின்னத்தை வரைந்து ம.க ஸ்டாலினிடம் கொடுத்தனர். அதனை கண்டு பூரிப்படைந்தார் மக. ஸ்டாலின். 

இந்த நிகழ்வை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இது குறித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

children drawing view pmk mk stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->