திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி., தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணம் - சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Chennai HC order For T kallupatti Election Result
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டி கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் நடந்த தேர்தல் முடிவை, தேர்தல் அதிகாரி திமுகவுக்கு ஆதரவாக மாற்றியது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரியை மார்ச் மாதம் 7ஆம் தேதி ஆஜராகும்படியும், பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ நகலை பாதுகாக்கவும் நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுகவின் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனி செல்வி தொடர்ந்த வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HC order For T kallupatti Election Result