வெறும் 30 பேர்., சென்னையின் வாக்கு சதவீதம்.! குத்து மதிப்பாக புள்ளி விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்.!
chennai election poll resut 2022
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குத்துமதிப்பாக 60.70 சதவீதம் வாக்கு பதிவு நடந்து உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், வாக்கு பதிவுகளின் குத்துமதிப்பான சதவிகிதத்தை மாவட்ட வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
மாநகராட்சி : தமிழகம் முழுவதும் மாநகராட்சியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 52.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
நகராட்சி : தமிழகம் முழுவதும் நகராட்சியை பொருத்தவரை 68.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பேரூராட்சி : தமிழகம் முழுவதும் பேரூராட்சி பொருத்தவரை 74.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில், சென்னை மாநகராட்சியில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட 8% தற்போது வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு 150 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 50 வார்டுகள் சேர்க்கப்பட்டு 200 வார்டுகளுடன், பெருநகர சென்னை மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது.
2011ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 51 .63 சதவீத வாக்குகள் பதிவாகின. அப்போது இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 17 ஆயிரம் பேர் இருந்தனர்.
தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்து உள்ளபோதும், வாக்குப்பதிவு சதவீதம் 43 .59 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது கடந்த 2011 தேர்தலைவிட 8 சதவீதம் குறைவாகும்.
மேலும் சில வாக்குச் சாவடிகளில் 30 சதவீதம்., அதாவது 100 பேரில் வெறும் 30 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.
English Summary
chennai election poll resut 2022