வீரப்பனை கொன்ற விஜயகுமாருக்கு, அதிமுக்கிய பதவி கொடுத்த மத்தியரசு.!
central government new post for vijaykumar
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, டிசம்பர் 3ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஓர் ஆண்டிற்கு கே.விஜயகுமா உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், மாவோயிஸ்டு பாதிப்புள்ள சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த உள்துறை அமைச்சகத்திற்கான ஆலோசகராக விஜயகுமார் இருப்பார் என மத்தியரசு தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கே.விஜயகுமார், தற்போது காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பின், அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயகுமரால் தான் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
central government new post for vijaykumar