ஸ்டாலின், துறை முருகன் மகன் மீது வழக்கு பதிவு!! - Seithipunal
Seithipunal


வேலூர் மக்களவை தொகுதியில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி நடைபெறும்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் .

இதற்கிடையே,  கடந்த சில நாட்களாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்க்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் அனுமதியின்றி கூட்டம் நடந்த திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் நேற்று சென்று சீல் வைத்தனர்.

இதையடுத்து, ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வட்டாட்சியர் சுஜாதா ஆம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குபதிவு 
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filing stalin and kathir anandh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->