அந்நிய மண்ணில் தாய்நாட்டை பழித்த ராகுல் காந்தியை மக்கள் விரட்டி அடிப்பார்கள் - குஷ்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசும்போது பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறது.

மேலும் அந்நிய மண்ணில் சென்று தாய் நாட்டின் புகழை கெடுப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். என்ன நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "எதிர்க்கட்சியினரும் ராகுல் காந்தியும் அந்நிய மண்ணில் இந்தியாவை அசிங்கப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இது அவர்கள் பார்க்க படிக்க சுவையாக இருக்கலாம் ஆனால் மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாய் நாட்டை பழித்த ராகுல் காந்தியை பொதுமக்கள் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா வளர்ந்து வருகிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP kushboo tweet about Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->