சிக்கலில் சிக்கும் ரஷ்யா., சற்றுமுன் மேலும் ஒரு நாடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
Belgium order for Russia
ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அந்நகரில் எந்த திசையிலும் வெடிகுண்டு சத்தகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், உச்சகட்ட போர் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து பெல்ஜியம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து ரஷ்யாவுக்கு எதிராக பெல்ஜியம் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரஷ்ய விமானங்கள் இனி பெல்ஜியம் வான்வெளியை பயன்படுத்த கூடாது என்றும் பெல்ஜியம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக டென்மார்க், அயர்லாந்து நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்பகுதியை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டு அரசும் தெரிவித்துள்ளது.