முதல்வர் ஆவதற்கு முன்பாகவே, கட்டுப்பாடுகளை விதித்த அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


கட்சித் தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதைக் கொண்டாட அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார். 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மொத்தமாக 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. பாஜக 8 தொகுதியில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் வாஷவுட் ஆகி விட்டது. 

இந்த நிலையில் காலையிலிருந்தே ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் குவிந்து வருகின்றனர். முன்னிலை செய்தி வரவர உற்சாகம் மிகுதியில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் கட்சி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார். டெல்லியில், எந்த பகுதியிலும் கட்டாயம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், மேலும் இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பலரும் இதை வரவேற்று இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravinth kejrival request to his party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->