திமுக அரசுக்கு தில்லு இருக்கா?! விசாரிக்க பயம், கைது செய்ய பயம்! இதுவா மாடல் ஆட்சி?! - அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal



திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 40க்கும் மேற்பட்டவர்களின் பல்லை பிடுங்கிய சம்பவத்தில் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

சம்பவங்கள் குறித்து வெளியில் தெரிந்து இரண்டு வாரங்களுக்குள் மேல் ஆகிய நிலையில், காரணமான பல்வீர் சிங், ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதை ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே (CPIM) விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

சாத்தன்குளம் காவல் நிலைய மரணம், ஜெய்பீம் திரைப்படம் என பொங்கி எழுந்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், இப்போதைய காவல்துறையை தன்னகத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல் மந்திரி ஸ்டாலினா, இப்படி அமைதியாக, அலட்சியமாக செயல்படுகிறார் என்ற விமர்சனம் சமூகவலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு சாதகமாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்தும் அமைதியோ அமைதி என்பது ஆட்சிக்கு அழகல்ல என்ற கடுமையான விமர்சங்களும் எழ தொடங்கியுள்ளது.

இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று கடுமையாக விமர்சித்துள்ள அறப்போர் இயக்கம், "குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் மீது வழக்கு பதிய பயம், விசாரிக்க பயம், கைது செய்ய பயம். 

அதற்கு பதிலாக விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டியது, புகார் கொடுத்தவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டியது. இதுவா உங்க மாடல் ஆட்சி?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Say About Ambai case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->