தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு கொண்டிருந்தவர்!! அன்புமணி இராமதாஸ் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல்!! - Seithipunal
Seithipunal


பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;-

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இளம் வயதிலேயே அரசியல் பதவிகளையும், அரசு பதவிகளையும் அலங்கரித்த சுஷ்மா சுவராஜ், அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் ஆவார். வெளியுறவுத்துறை அமைச்சர் என்றால் உள்நாட்டு மக்களின் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர் என்ற நிலைமையை மாற்றிய பெருமை இவருக்கே உண்டு. இவர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது தான், இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் தம்மை தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார். டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தம்மை தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தவர். தமிழக மீனவர்கள் சிக்கலத் தீர்ப்பதற்காக ஆர்வம் காட்டினார்.

தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு கொண்டிருந்தவர். நான் 2004-ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் அந்தப் பதவியை வகித்தவர். சுகாதாரத்துறை அமைச்சராக நான் செயல்படுத்திய திட்டங்களை பாராட்டியிருக்கிறார். 2009-14 காலத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பு ஆகும்.

மறைந்த தலைவர் சுஷ்மா சுவராஜை இழந்து வாடும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், குடும்பத்தினருக்கும்  இரங்கல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani condolenses to susma swaraj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->