அமமுக வினருக்கு அடித்த அதிஷ்டம்.. தினகரன் கூட்டத்தில் கொட்டும் பண மழை.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து தினகரன் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். அமமுகவை தேர்தல் ஆணையம் கட்சியாக பதிவு செய்தது. 

இந்நிலையில்,  ஈரோடு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர்களை செயலாளர்களை டிடிவிதினகரன் நியமித்துள்ளார். ஆனால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலரும் சில மாதத்திலேயே வேறு கட்சிக்கு தாவி விடுகின்றனர். இதனால் மாவட்ட செயலாளர் பதவியை ராசியில்லாத பதவியாக அமமுகவினர் கருதுகின்றனர்.

நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சி அடைகிறதோ இல்லையோ, தன்னை வளர்த்துக் கொள்வர் என கூறப்பட்டது.

பதவி வழங்கிய சில நாட்களிலேயே புதுப்புது கார்களில் பவனி வருகிறார். ஆளும் கட்சியுடன் இணைந்து பல காரியங்களை செய்து முடித்துள்ளார். இவர் ஆளும் கட்சியுடன் இணைந்து தனது வேலைகளை செய்து வருவதால் விரைவில் கட்சி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவில் மாவட்ட செயலாளராக நிமிக்கப்பட்டவர்கள், கட்சியை வளர்க்காமல் தங்களை வளர்த்துக்கொண்டு கட்சி தாவி விடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk district secretary post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->