அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் : தமிழகத்தில் இன்று முதல் தொண்டர்களை சந்திக்கும் சசிகலா.!
AIADMK single leadership issue: Sasikala to meet first volunteers in Tamil Nadu today
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் சசிகலா இன்று முதல் திருத்தணியில் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.
குண்டலூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் தொண்டர்களைசந்திக்கிறார்.
அதன்பின்னர், அம்மையார்குப்பம் செல்கிறார். இதனையடுத்து தி.நகர் இல்லம் வந்தடைகிறார். தொண்டர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவேண்டும் என சசிகலா அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK single leadership issue: Sasikala to meet first volunteers in Tamil Nadu today