20 அமாவாசை போயாச்சு... உதயநிதி அமைச்சரானதே திமுகவின் சாதனை... ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏ..!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்த ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அதிமுக கட்சியின் சார்பில் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் துணைப் போராட்டமான ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழா மேடையில் பேசிய அவர் "திமுக ஆட்சியில் பொறுப்பேற்று 20 அமாவாசை போய்விட்டது. திமுக செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் அமர வைத்தது மட்டும்தான். 

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருக்கும் அமைச்சர் பதவியை பற்றி எதுவும் தெரியாது. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தவித வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 20 மாத காலத்தில் சொத்து வரி, பால், மின்சார கட்டணம், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும் நாள்தோறும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று வருகிறது" என கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA criticizes DMK in arcot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->