#BigBreaking | அதிமுக பொதுக்குழுவை கூட்டுங்கள் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனுவாக, "இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனுவிற்கு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "ஈரோடு இடைத்தேர்தலில்  இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS case order 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->