ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணா அவர்களின் 53-ஆவது நினைவு நாளை முன்னிட்டு  அவரது நினைவிடத்தில், அதிமுக தலைமைகளான ஓபிஎஸ், இபிஎஸ் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 53 -ஆவது நினைவு நாளான 3.2.2022 வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்தில், 

கழக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள். 

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கழக நிர்வாகிகள் அனைவரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தமிழ் நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3.2.2022 அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops eps announcement jan 29


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->