வேலூரில் பரபரப்பு.. சோகத்தில் அதிமுகவினர்.!
admk member murder in vellore
வேலூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மாட்டு வண்டி தொழிலாளி. இவர் அப்பகுதியில் அதிமுக பிரமுகர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.
இந்நிலையில், இன்று காலை சேண்பாக்கம் தேவாலயம் அருகே சேகர் அமர்ந்து இருந்தார். அங்கு வந்த சில மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
admk member murder in vellore