வேலூரில் பரபரப்பு.. சோகத்தில் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மாட்டு வண்டி தொழிலாளி. இவர் அப்பகுதியில் அதிமுக பிரமுகர்கள் மிகவும் பிரபலமானவர்கள். 

இந்நிலையில், இன்று காலை சேண்பாக்கம் தேவாலயம் அருகே சேகர் அமர்ந்து இருந்தார். அங்கு வந்த சில மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member murder in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->