#BREAKING | ஓபிஎஸ் தரப்பு மீதான வழக்கை சிபிஐக்கு மற்ற வேண்டும் - சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ செய்தி.! - Seithipunal
Seithipunal


கடந்த பதினோராம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக மாறியது.

இதில், அதிமுகவின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. மேலும் பொது மக்களின் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன. 

இதேபோல் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் மோதலில் காயம் ஏற்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்து செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் களவு போனதாக கொடுக்கப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று, அதிமுக சிவி சண்முகம் எம்பி சார்பில் டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Head Office Case CV Shanmugam PM Complaint to DGP Office


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->